ஹதீஸ்கள்
#1468
ஸஹீஹ் அல்-புகாரீ - Obligatory Charity Tax (Zakat)
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸகாத் வசூலிக்குமாறு (உமர் (ரலி) அவர்களுக்குக்) கட்டளையிட்டார்கள். அப்போது இப்னு ஜமீல், காலித் பின் அல்வலீத், அப்பாஸ் பின் அப்தில் முத்தலிப் (ரலி) ஆகியோர் (ஸகாத் தர) மறுத்து விட்டதாகக் கூறப்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள், இப்னு ஜமீல் ஏழையாக இருந்து, அல்லாஹ்வும் அவன் தூதரும் அவரைச் செல்வராக்கிய பிறகே அவர் (ஸகாத் தர) மறுத்துள்ளார். காலிதைப் பொறுத்த வரை, நிச்சயமாக காலிதுக்கு நீங்கள் அநீதி இழைக்கின்றீர்கள். அவரோ தம் கவசங்களையும் போர்க் கருவிகளையும் அல்லாஹ்வின் பாதையில் (அறக்கொடையாக) வழங்க முடிவு செய்திருந்தார். அல்லாஹ்வின் தூதரு டைய பெரிய தந்தையான அப்பாஸ் பின் அப்தில் முத்தலிப் அவர்கள் செலுத்த வேண்டிய தர்மம், அவர் (சார்பாக நாம்) செலுத்த வேண்டியதாகும்; அதைப் போன்ற இன்னொரு மடங்கும்தான்” எனக் கூறினார்கள். இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஓர் அறிவிப்பில், “அது அவர்மீது உள்ளது; அதைப் போன்ற இன்னொரு மடங்கும்” என இடம்பெற்றுள்ளது. மற்றோர் அறிவிப்பில், ‘அதைப் போன்றதுடன்’ என இடம்பெற்றுள்ளது.17 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Obligatory Charity Tax (Zakat)
- Hadith Index
- #1468
- Book Index
- 70
Grades
- -