ஹதீஸ்கள்
#1462
ஸஹீஹ் அல்-புகாரீ - Obligatory Charity Tax (Zakat)
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாளிலோ நோன்புப் பெருநாளிலோ தொழும் திடலுக்கு (முஸல்லா) சென்று தொழுதுவிட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். “மக்களே! தர்மம் செய்யுங்கள்” என்று கட்டளையிட்டார்கள். பிறகு பெண்கள் பகுதிக்குச் சென்று, “பெண்களே! தர்மம் செய்யுங்கள்; ஏனெனில், நரகவாசிகளில் நீங்களே அதிகமாக இருப்பதை நான் பார்த்தேன்” என்றார்கள். “அல்லாஹ்வின் தூதரே! ஏன் இந்நிலை?” எனப் பெண்கள் கேட்டதும், “நீங்கள் அதிகமாகச் சபிக்கிறீர்கள்; கணவனுக்கு மாறு செய்கிறீர்கள்; பெண் குலமே! உறுதிவாய்ந்த அறிவுடைய ஆண்மகனின் அறிவைக்கூட மழுங்கடிப்பவர்களாக, அறிவிலும் மார்க்கத்திலும் குறைபாடுள்ள உங்களைப் போன்று வேறு யாரையும் நான் பார்த்ததில்லை” என்றார்கள். பிறகு திரும்பி தமது இல்லத்திற்கு வந்தார்கள். அங்கு இப்னு மஸ்ஊதின் மனைவி ஸைனப் (ரலி) அவர்கள் வந்து வீட்டினுள் வர அனுமதி கோரினார். “அல்லாஹ்வின் தூதரே! ஸைனப் வந்திருக்கிறார்” என்று கூறப்பட்டது. “எந்த ஸைனப்?” என நபி (ஸல்) அவர்கள் வினவ, “இப்னு மஸ்ஊதின் மனைவி ஸைனப்” என்று கூறப்பட்டது. “அவருக்கு அனுமதி வழங்குங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதும் அனுமதி வழங்கப் பட்டது. அவர் (வந்ததும்), “அல்லாஹ்வின் தூதரே! தர்மம் செய்யுமாறு இன்று நீங்கள் கட்டளையிட்டீர்கள். என்னிடம் (எனக்குச் சொந்தமான) ஒரு நகை இருக்கிறது. அதைத் தர்மம் செய்ய நான் நாடினேன். (என் கணவர்) இப்னு மஸ்ஊத், தாமும் தம் குழந்தைகளுமே அதைப் பெறுவதற்கு அதிக உரிமை படைத்தவர்கள் எனக் கூறுகிறார். (என்ன செய்ய?)” என்று கேட்டார். “இப்னு மஸ்ஊத் கூறுவது உண்மைதான்! உன் கணவரும் உன் குழந்தைகளுமே உனது தர்மத்தைப் பெறுவதற்கு அதிக உரிமை படைத்தவர்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا ابن ابي مريم، اخبرنا محمد بن جعفر، قال اخبرني زيد، عن عياض بن عبد الله، عن ابي سعيد الخدري رضى الله عنه خرج رسول الله صلى الله عليه وسلم في اضحى او فطر الى المصلى ثم انصرف فوعظ الناس وامرهم بالصدقة فقال " ايها الناس تصدقوا ". فمر على النساء فقال " يا معشر النساء تصدقن، فاني رايتكن اكثر اهل النار ". فقلن وبم ذلك يا رسول الله قال " تكثرن اللعن وتكفرن العشير، ما رايت من ناقصات عقل ودين اذهب للب الرجل الحازم من احداكن يا معشر النساء ". ثم انصرف فلما صار الى منزله جاءت زينب امراة ابن مسعود تستاذن عليه فقيل يا رسول الله هذه زينب فقال " اى الزيانب ". فقيل امراة ابن مسعود. قال " نعم ايذنوا لها ". فاذن لها قالت يا نبي الله انك امرت اليوم بالصدقة، وكان عندي حلي لي، فاردت ان اتصدق به، فزعم ابن مسعود انه وولده احق من تصدقت به عليهم. فقال النبي صلى الله عليه وسلم " صدق ابن مسعود، زوجك وولدك احق من تصدقت به عليهم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Obligatory Charity Tax (Zakat)
- Hadith Index
- #1462
- Book Index
- 64
Grades
- -
