ஹதீஸ்கள்
#1461
ஸஹீஹ் அல்-புகாரீ - Obligatory Charity Tax (Zakat)
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: மதீனா அன்சாரிகளிலேயே அபூ தல்ஹா (ரலி) அவர்கள் அதிக வசதி படைத்தவராக இருந்தார். அவருக்குப் பேரீச்ச மரங்கள் அதிகம் இருந்தன. அவருடைய செல்வங்களில் ‘பைருஹா’ என்ற தோட்டமே அவருக்கு மிகவும் விருப்பமானதாக இருந்தது. அது மஸ்ஜிது(ந் நபவீ பள்ளிவாசலு)க்கு எதிரில் இருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அத்தோட்டத்திற்குள் சென்று அங்குள்ள நல்ல (சுவை) நீரைக் குடிப்பது வழக்கம். இந்நிலையில், “நீங்கள் விரும்புகின்ற (செல்வத்)திலிருந்து தானம் செய்யாத வரை நீங்கள் ஒருபோதும் (நிறைவான) பலனை அடைந்துகொள்ளமாட்டீர்கள்” (3:92) எனும் இறைவசனம் அருளப்பெற்றபோது, அபூதல்ஹா (ரலி) அவர்கள் எழுந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! உயர்வும் வளமும் மிக்க அல்லாஹ், ‘நீங்கள் விரும்புகின்ற (செல்வத்)திலிருந்து தானம் செய்யாத வரை நீங்கள் ஒருபோதும் பலனை அடைந்துகொள்ளமாட்டீர்கள்’ என்று கூறுகின்றான். என் செல்வங்களில் எனக்கு மிகவும் விருப்பமானது, ‘பைருஹா’ எனும் தோட்டமேயாகும். (இனி) அது அல்லாஹ்வுக்காக (நான் வழங்கும்) தர்மம் ஆகும். அதற்கான நன்மையையும் அது (மறுமையில் எனக்குரிய) சேமிப்பாக இருப்பதையும் அல்லாஹ்விடம் நான் எதிர்பார்க்கிறேன். எனவே, அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் உங்களுக்குக் காட்டிய வழியில் அதைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்” எனக் கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நல்லது! அது (மறுமையில்) இலாபம் தரும் செல்வம்தானே! அது (மறுமையில்) இலாபம் தரும் செல்வம் தானே! நீர் கூறியதை நான் செவியுற்றேன். நீர் அதை உம்முடைய நெருங்கிய உறவினர்களுக்கு (தானமாக) வழங்கு வதையே நான் (உசிதமாகக்) கருதுகின் றேன்” எனக் கூறினார்கள். அதற்கு அபூதல்ஹா (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! நான் அவ்வாறே செய்கிறேன்” எனக் கூறிவிட்டு, அத்தோட் டத்தைத் தம் நெருங்கிய உறவினருக்கும் தம் தந்தையின் சகோதரர் பிள்ளை களுக்கும் பங்கிட்டுவிட்டார்கள். இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் இஸ்மாயீல் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில், (இலாபம் தரும் -‘ராபிஹ்’ என்பதற்குப் பதிலாக) ‘நன்மை கிடைத்துவிட்ட’ (ராயிஹ்) என இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
حدثنا عبد الله بن يوسف، اخبرنا مالك، عن اسحاق بن عبد الله بن ابي طلحة، انه سمع انس بن مالك رضى الله عنه يقول كان ابو طلحة اكثر الانصار بالمدينة مالا من نخل، وكان احب امواله اليه بيرحاء وكانت مستقبلة المسجد، وكان رسول الله صلى الله عليه وسلم يدخلها ويشرب من ماء فيها طيب قال انس فلما انزلت هذه الاية {لن تنالوا البر حتى تنفقوا مما تحبون} قام ابو طلحة الى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله. ان الله تبارك وتعالى يقول {لن تنالوا البر حتى تنفقوا مما تحبون} وان احب اموالي الى بيرحاء، وانها صدقة لله ارجو برها وذخرها عند الله، فضعها يا رسول الله حيث اراك الله. قال فقال رسول الله صلى الله عليه وسلم " بخ، ذلك مال رابح، ذلك مال رابح، وقد سمعت ما قلت واني ارى ان تجعلها في الاقربين ". فقال ابو طلحة افعل يا رسول الله. فقسمها ابو طلحة في اقاربه وبني عمه. تابعه روح. وقال يحيى بن يحيى واسماعيل عن مالك رايح
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Obligatory Charity Tax (Zakat)
- Hadith Index
- #1461
- Book Index
- 63
Grades
- -
