ஹதீஸ்கள்
#1460
ஸஹீஹ் அல்-புகாரீ - Obligatory Charity Tax (Zakat)
அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்க(ள் கஅபாவின் நிழலில் அமர்ந்திருந்தபோது அவர்க)ளி டம் நான் போய்ச்சேர்ந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘எனது உயிர் எவன் கையி லுள்ளதோ’ அல்லது ‘எவனைத் தவிர வேறு இறைவன் இல்லையோ’ அவன் மீதாணையாக -அல்லது அவர்கள் சத்தியம் செய்தபடி- ஒருவருக்கு ஒட்டகமோ, மாடோ, ஆடோ இருந்து அவற்றுக்கான (ஸகாத் எனும்) கடமையை அவர் நிறைவேற்றவில்லையாயின், மறுமை நாளில் அவை ஏற்கெனவே இருந்ததைவிடப் பெரியவையாகவும் கொழுத்தவையாகவும் கொண்டுவரப்படாமல் இருக்காது. அவை அவரை (கால்) குளம்புகளால் மிதித்துக் கொம்புகளால் முட்டும். அவற்றில் கடைசிப் பிராணி அவரைத் தாக்கிவிட்டுச் சென்றதும் மீண்டும் முதல் பிராணி அவர்மீது தாக்குதல் நடத்துவதற்காக அனுப்பப்படும். இந்நிலை மக்களிடையே இறுதித் தீர்ப்பு வழங்கப்படும்வரை நீடிக்கும்.’ இதே ஹதீஸை நபி (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்களும் அறிவித்துள்ளார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Obligatory Charity Tax (Zakat)
- Hadith Index
- #1460
- Book Index
- 62
Grades
- -