ஹதீஸ்கள்
#1422
ஸஹீஹ் அல்-புகாரீ - Obligatory Charity Tax (Zakat)
மஅன் பின் யஸீத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நானும் என் தந்தையும் என் பாட்ட னாரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (இஸ்லாத்தை ஏற்று) உறுதிமொழிப் பிரமாணம் (பைஅத்) செய்திருந்தோம். நபி (ஸல்) அவர்கள் எனக்குப் பெண் பேசித் திருமணம் செய்தும்வைத்தார்கள். அவர்களிடம் (ஒரு தடவை) ஒரு பிரச்சினையைக் கொண்டுசென்றேன். அதாவது என் தந்தை யஸீத் பின் அல்அக்னஸ் (ரலி) அவர்கள் தர்மம் செய்வதற்காகச் சில தீனார்களை எடுத்துக் கொண்டு சென்று அதைப் பள்ளிவாசலில் இருந்த ஒருவருக்கு அருகில் வைத்து விட்டார். நான் சென்று அதை எடுத்து வந்துவிட்டேன். அப்போது என் தந்தை, “அல்லாஹ் வின் மீதாணையாக! நான் உன்னை எண்ணி (அதை வைத்தி)டவில்லையே!” என்றார்கள். உடனே நான் அவரை அழைத்துக்கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து தீர்வு கேட்டேன். அதற்கு அவர்கள் “யஸீதே! நீர் எண்ணிய (தர்மத்திற்கான நன்மையான)து உமக்குக் கிடைக்கும். மஅனே! நீர் எடுத்த (பொருளான)து உமக்கு உரியதே” எனக் கூறினார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Obligatory Charity Tax (Zakat)
- Hadith Index
- #1422
- Book Index
- 26
Grades
- -