ஹதீஸ்கள்
#1420
ஸஹீஹ் அல்-புகாரீ - Obligatory Charity Tax (Zakat)
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களின் துணைவியரில் சிலர் நபி (ஸல்) அவர்களிடம், “உங்களது இறப்புக்குப்பின் எங்களில் யார் முதலில் உங்களை வந்து சேர்வார்?” எனக் கேட்டார். அதற்கு, “உங்களில் கை நீளமானவரே!” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே துணைவியர் ஒரு குச்சியை எடுத்துத் தங்களின் கைகளை அளந்துபார்க்க ஆரம்பித்தார்கள். அப்போது சவ்தா (ரலி) அவர்களின் கைகளே மிகவும் நீளமானவையாக இருந்தன. (ஸைனப் (ரலி) இறந்த) பிறகுதான் கை நீளமானவர் என்பது, அதிகம் தர்மம் செய்பவரைக் குறிக்கிறது என்பதை நாங்கள் அறிந்துகொண்டோம். (ஸைனப்) அவ்வாறு அதிகம் தர்மம் செய்பவராக இருந்ததால்தான் நபி (ஸல்) அவர்களை முதலில் அடைந்தார். மேலும், அவர் தர்மம் செய்வதை (மிகவும்) விரும்பக்கூடியவராகவும் இருந்தார். அத்தியாயம் :
حدثنا موسى بن اسماعيل، حدثنا ابو عوانة، عن فراس، عن الشعبي، عن مسروق، عن عايشة، رضى الله عنها ان بعض، ازواج النبي صلى الله عليه وسلم قلن للنبي صلى الله عليه وسلم اينا اسرع بك لحوقا قال " اطولكن يدا ". فاخذوا قصبة يذرعونها، فكانت سودة اطولهن يدا، فعلمنا بعد انما كانت طول يدها الصدقة، وكانت اسرعنا لحوقا به وكانت تحب الصدقة
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Obligatory Charity Tax (Zakat)
- Hadith Index
- #1420
- Book Index
- 24
Grades
- -
