ஹதீஸ்கள்
#1413
ஸஹீஹ் அல்-புகாரீ - Obligatory Charity Tax (Zakat)
அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தேன். அப்போது அங்கு இருவர் வந்தனர். அவர்களில் ஒருவர் தமது வறுமையைப் பற்றி முறையிட்டார். மற்றொருவர் வழிப்பறி பற்றி முறையிட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “வழிப்பறியை நீர் குறைவாகவே காண்பீர். இறுதியில், காவலரின்றி வணிக ஒட்டகங்கள் (மதீனாவிலிருந்து) மக்காவரை செல்லும் நிலை உருவாகும். வறுமையோ (ஒரு காலத்தில் முற்றாக விலகும்). நிச்சயமாக உங்களில் ஒருவர் தர்மத்தை எடுத்துக்கொண்டு அலைவார். அதை அவரிடமிருந்து பெறுவதற்கு யாரையும் அவர் காணமாட்டார். அந்நிலை ஏற்படாத வரை யுகமுடிவு நாள் ஏற்படாது. பிறகு உங்களில் ஒருவர் அல்லாஹ் வின் முன்னிலையில் நிற்பார். அவருக்கும் அல்லாஹ்வுக்குமிடையே திரையுமிருக் காது; மொழிபெயர்ப்பாளரும் இருக்க மாட்டார். அப்போது (அல்லாஹ்), “நான் உனக்குப் பொருளைத் தரவில்லையா?” எனக் கேட்பான். அவர் ‘ஆம்’ என்பார். பிறகு “உன்னிடம் ஒரு தூதரை நான் அனுப்பவில்லையா?” எனக் கேட்பான். அவர் ‘ஆம்’ என்பார். பிறகு தமது வலப் பக்கம் பார்ப்பார்; அங்கு நரகத்தையே காண்பார். பின்னர் இடப் பக்கத்திலும் பார்ப்பார்; அங்கும் நரகத்தையே காண்பார். எனவே, பேரீச்சம் பழத்தின் ஒரு சிறிய துண்டை தர்மம் செய்தாவது, அதுவும் கிடைக்கவில்லை யெனில் ஒரு நல்ல வார்த்தையின் மூலமாவது அந்த நரகத்திலிருந்து உங்களைக் காத்துக்கொள்ளுங்கள்” எனக் கூறினார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Obligatory Charity Tax (Zakat)
- Hadith Index
- #1413
- Book Index
- 17
Grades
- -