ஹதீஸ்கள்
#1400
ஸஹீஹ் அல்-புகாரீ - Obligatory Charity Tax (Zakat)
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் இறந்து அபூபக்ர் (ரலி) அவர்கள் (ஆட்சிக்கு) வந்ததும், அரபியரில் சிலர் (ஸகாத்தை மறுத்தன் மூலம்) இறைமறுப்பாளர்களாயினர். (அவர்கள்மீது போர் தொடுக்க அபூபக்ர் (ரலி) அவர்கள் தயாரானார்கள்.) உமர் (ரலி) அவர்கள், “லா இலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை) என்று கூறியவர் தமது உயிரையும் உடைமையையும் என்னிடமிருந்து காத்துக்கொண்டார் -தண்டனைக்குரிய குற்றம் புரிந்தவரைத் தவிர- அவரது விசாரணை அல்லாஹ் விடமே உள்ளது என நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கும்போது, நீங்கள் எவ்வாறு இந்த மக்களுடன் போர் செய்ய முடியும்?” என்று கேட்டார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! தொழுகை யையும் ஸகாத்தையும் பிரித்துப் பார்ப் போருடன் நிச்சயமாக நான் போர் செய்வேன். ஸகாத், பொருளாதாரக் கடமையாகும்; அல்லாஹ்வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்களிடம் (ஸகாத்தாக) வழங்கி வந்த ஓர் ஆட்டுக் குட்டியை இவர்கள் வழங்க மறுத்தால்கூட அதை மறுத்ததற்காக நான் இவர்களுடன் போர் செய்வேன்” என்றார்கள். இது பற்றி உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! அபூபக்ரின் இதயத்தை (உறுதியான முடிவெடுக்கும் வகையில்) அல்லாஹ் விசாலமாக்கி இருந்ததாலேயே இவ்வாறு கூறினார்கள். அவர்கள் கூறியதே சரியானதாகும் என நான் விளங்கிக்கொண்டேன்” என்றார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Obligatory Charity Tax (Zakat)
- Hadith Index
- #1400
- Book Index
- 5
Grades
- -