ஹதீஸ்கள்
#1389
ஸஹீஹ் அல்-புகாரீ - Funerals (Al-Janaa'iz)
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் நோயுற்றிருந்தபோது, “என்னிடம் தங்கும் நாள் தாமதப்படுவதாக எண்ணி, “இன்று நான் எங்கிருக்கிறேன்? நாளை நான் எங்கே இருப்பேன்?” என்று (ஆவலோடு) கேட்டுக்கொண்டிருந்தார்கள். எனது வீட்டில் தங்கும் நாளிலேயே அவர்களது உயிரை, எனது நுரையீரலு(ள்ள பகுதி)க்கும் காறையெலும்பு(ள்ள பகுதி)க்கும் நடுவில் (அவர்கள் சாய்ந்திருந்த நிலையில்) அல்லாஹ் கைப்பற்றினான். எனது வீட்டிலேயே அவர்கள் அடக்கம் செய்யப்பட்டார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا اسماعيل، حدثني سليمان، عن هشام، وحدثني محمد بن حرب، حدثنا ابو مروان، يحيى بن ابي زكرياء عن هشام، عن عروة، عن عايشة، قالت ان كان رسول الله صلى الله عليه وسلم ليتعذر في مرضه " اين انا اليوم اين انا غدا " استبطاء ليوم عايشة، فلما كان يومي قبضه الله بين سحري ونحري، ودفن في بيتي
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Funerals (Al-Janaa'iz)
- Hadith Index
- #1389
- Book Index
- 141
Grades
- -
