ஹதீஸ்கள்
#1387
ஸஹீஹ் அல்-புகாரீ - Funerals (Al-Janaa'iz)
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்(கள் நோயுற்றிருந்தபோது அவர்)களிடம் நான் சென்றேன். அப்போது “நபி (ஸல்) அவர்களை எத்தனைத் துணிகளில் ‘கஃபன்’ செய்தீர்கள்?” என்று கேட்டார்கள். நான் “வெண்மையான மூன்று பருத்தித் துணிகளில் கஃபன் செய்தோம். அவற்றில் மேலங்கியோ தலைப் பாகையோ இல்லை” என்றேன். அபூபக்ர் (ரலி) அவர்கள் என்னிடம், “நபி (ஸல்) அவர்கள் எந்தக் கிழமை யில் இறந்தார்கள்?”எனக் கேட்டார்கள். நான் ‘திங்கட்கிழமை’ என்றேன். “இன்று என்ன கிழமை?” என்று கேட்ட தும், நான் ‘திங்கட்கிழமை’ என்றேன். அதற்கு அவர்கள் “இன்றிரவுக்குள் (எனது மரணம்) நிகழும் என நான் எண்ணுகிறேன்” என்று கூறிவிட்டுத் தாம் நோயுற்றிருந்தபோது அணிந் திருந்த ஆடையைப் பார்த்தார்கள். அதில் குங்குமப்பூவின் கறை படிந்திருந் தது. “இதைக் கழுவி இத்துடன் இன்னும் இரு துணிகளையும் சேர்த்து அவற்றில் என்னைக் ‘கஃபன்’ இடுங்கள்” எனக் கூறினார்கள். நான், “இது பழையதாயிற்றே!” என்றேன். அதற்கு அவர்கள் “இறந்த வரைவிட உயிருடனிருப்பவரே புத்தாடை அணிய அதிகத் தகுதி படைத்தவர்; இ(ந்தக் கஃபனான)து, (இறந்த) உடலிலிருந்து வழியும் சீழ் சலத்துக்கு உரியதுதான்” என்றார்கள். பிறகு அன்று மாலைவரை அவர்கள் இறக்கவில்லை. செவ்வாய் இரவில்தான் இறந்தார்கள்; (அன்று) காலை விடிவ தற்குமுன் அடக்கம் செய்யப்பட்டார்கள். அத்தியாயம் :
حدثنا معلى بن اسد، حدثنا وهيب، عن هشام، عن ابيه، عن عايشة رضى الله عنها قالت دخلت على ابي بكر رضى الله عنه فقال في كم كفنتم النبي صلى الله عليه وسلم قالت في ثلاثة اثواب بيض سحولية، ليس فيها قميص ولا عمامة. وقال لها في اى يوم توفي رسول الله صلى الله عليه وسلم قالت يوم الاثنين. قال فاى يوم هذا قالت يوم الاثنين. قال ارجو فيما بيني وبين الليل. فنظر الى ثوب عليه كان يمرض فيه، به ردع من زعفران فقال اغسلوا ثوبي هذا، وزيدوا عليه ثوبين فكفنوني فيها. قلت ان هذا خلق. قال ان الحى احق بالجديد من الميت، انما هو للمهلة. فلم يتوف حتى امسى من ليلة الثلاثاء ودفن قبل ان يصبح
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Funerals (Al-Janaa'iz)
- Hadith Index
- #1387
- Book Index
- 139
Grades
- -
