ஹதீஸ்கள்
#1350
ஸஹீஹ் அல்-புகாரீ - Funerals (Al-Janaa'iz)
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (நயவஞ்சகர்களின் தலைவர்) அப்துல்லாஹ் பின் உபை (மரணித்து) சவக்குழிக்குள் வைக்கப்பட்டபிறகு அங்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்தார்கள்; அவரது சடலத்தை வெளியே எடுக்குமாறு உத்தரவிட்டார்கள். அவ்வாறே அவரது சடலம் வெளியே எடுக்கப்பட்டது. உடனே அதைத் தம் முழங்கால்கள்மீது வைத்து, அதன்மீது தமது உமிழ்நீரை உமிழ்ந்து, தமது மேலங்கியை அதற்கு அணிவித்தார்கள். (இவ்வாறு நபியவர்கள் செய்ததற்குக் காரணம் என்ன என்பதை) அல்லாஹ்வே நன்கறிவான். (இருந்தாலும், நபி (ஸல்) அவர்களின் தந்தையின் சகோதரர்) அப்பாஸ் (ரலி) அவர்களுக்கு (அவர் பத்ரில் போர்க் கைதியாகப் பிடிக்கப்பட்டு ஆடையின்றி இருந்தபோது) அப்துல்லாஹ் பின் உபை ஓர் மேலங்கியை அணிவித்தார் (என்பது காரணமாக இருக்கலாம்). இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில் சுஃப்யான் பின் உயைனா, அபூஹாரூன் (ரஹ்) ஆகியோர் கூறியிருப்பதாவது: அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்மீது இரு மேலங்கிகள் இருந்தன. அவர்களிடம் அப்துல்லாஹ் பின் உபையின் (முஸ்லிமான) புதல்வர், “அல்லாஹ்வின் தூதரே! தங்கள் மேனி யைத் தழுவியுள்ள உங்களது மேலங்கியை என் தந்தைக்கு அணிவியுங்கள்” என்று கேட்டுக்கொண்டார். “அப்துல்லாஹ் பின் உபைக்கு நபி (ஸல்) அவர்கள் தமது மேலங்கியை அணிவித்தது, அவர் (பத்ர் போரின் போது கைதான அப்பாஸ் (ரலி) அவர்களுக்கு) உதவியதற்கான பிரதி உபகாரம்தான் என்றே பலரும் கருது கின்றனர் என சுஃப்யான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Funerals (Al-Janaa'iz)
- Hadith Index
- #1350
- Book Index
- 104
Grades
- -