ஹதீஸ்கள்
#1349
ஸஹீஹ் அல்-புகாரீ - Funerals (Al-Janaa'iz)
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: “அல்லாஹ் மக்காவைப் புனிதமாக்கி யுள்ளான். எனக்கு முன்புள்ள யாருக் கும் (இங்கு போர் புரிதல்) அனுமதிக்கப் படவில்லை; எனக்குப் பின்பும் யாருக் கும் அனுமதிக்கப்படமாட்டாது. எனக் குக்கூட பகலில் சற்று நேரம் (மக்கா வெற்றிக்காக) அனுமதிக்கப்பட்டது. எனவே, இனி மக்காவில் உள்ள புற்கள் பிடுங்கப்படக் கூடாது; மரங்கள் வெட்டப்படக் கூடாது; வேட்டைப் பிராணிகள் விரட்டியடிக்கப்படக் கூடாது; அறிவிப்புச் செய்பவர்களைத் தவிர வேறு யாரும் இங்கு கீழே விழுந்து கிடக்கும் பொருட்களைப் பொறுக்கக் கூடாது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது (என் தந்தை) அப்பாஸ் (ரலி) அவர்கள், “இத்கிர் என்ற புல்லைத் தவிரவா? அது நம் சவக்குழிகளுக்கும் பொற்கொல்லர்களுக்கும் தேவைப்படு கின்றதே?” என்றதும் நபி (ஸல்) அவர்கள், “இத்கிர் என்ற புல்லைத் தவிர” என்றார்கள். அபூஹுரைரா (ரலி) அவர்கள், “நம் சவக்குழிகளுக்கும் வீடுகளுக்கும் (இத்கிர் புல்லைப்) பயன்படுத்தலாம்” என நபி (ஸல்) அவர்கள் கூறியதாகத் தெரிவித்துள்ளார்கள். ஸஃபிய்யா பின்த் ஷைபா (ரலி) அவர்களும் இதைப் போன்றே அறிவிக்கிறார்கள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “நம் உலோகத் தொழிலாளர்களுக்கும் வீடுகளுக்கும் பயன்படுத்தலாம்” என்று கூறியதாக தாவூஸ் (ரஹ்) அவர்கள் மற்றோர் அறிவிப்பில் தெரிவிக்கிறார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Funerals (Al-Janaa'iz)
- Hadith Index
- #1349
- Book Index
- 103
Grades
- -