ஹதீஸ்கள்
#1322
ஸஹீஹ் அல்-புகாரீ - Funerals (Al-Janaa'iz)
சுலைமான் பின் அபீசுலைமான் அஷ்ஷைபானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: “தனியாக இருந்த ஓர் அடக்கத் தலத்தைக் கடந்து சென்ற நபி (ஸல்) அவர்கள், அங்கு எங்களுக்கு இமாமாக நின்று (ஜனாஸா தொழுகை) தொழுவித்தார்கள். நாங்களும் அவர்களுக்குப் பின்னால் அணிவகுத்துத் தொழுதோம்” என நபி (ஸல்) அவர்களுடன் சென்ற ஒருவர் எனக்கு அறிவித்தார் என்று ஷஅபீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள். நாங்கள் “அம்ரின் தந்தை(யாகிய ஷஅபீ)யே! உங்களுக்கு அதை அறிவித்த வர் யார்?” எனக் கேட்டதற்கு, “இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள்தான்” என்று ஷஅபீ (ரஹ்) அவர்கள் பதிலளித்தார்கள். அத்தியாயம் :
حدثنا سليمان بن حرب، حدثنا شعبة، عن الشيباني، عن الشعبي، قال اخبرني من، مر مع نبيكم صلى الله عليه وسلم على قبر منبوذ فامنا فصففنا خلفه. فقلنا يا ابا عمرو من حدثك قال ابن عباس رضى الله عنهما
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Funerals (Al-Janaa'iz)
- Hadith Index
- #1322
- Book Index
- 79
Grades
- -
