ஹதீஸ்கள்
#1309
ஸஹீஹ் அல்-புகாரீ - Funerals (Al-Janaa'iz)
அபூசயீத் கைசான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாங்கள் ஒரு நல்லடக்கத்தில் பங்கேற்றோம். அப்போது அபூஹுரைரா (ரலி) அவர்கள், (மதீனாவின் ஆட்சியராக இருந்த) மர்வான் பின் அல்ஹகம் அவர்களின் கையைப் பற்றினார். பிறகு பிரேதம் (தரையில்) இறக்கி வைக்கப்படுவதற்குமுன் இருவரும் அமர்ந்துவிட்டார்கள். அப்போது அங்கு வந்த அபூசயீத் (ரலி) அவர்கள், மர்வானின் கையைப் பிடித்து, “எழுந்திரும்! அல்லாஹ்வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்கள் இ(வ்வாறு அமர்வ)தைத் தடுத்துள்ளார்கள் என்பதை இவர் (அபூஹுரைரா) நன்கு அறிந்துள்ளார்” எனக் கூறினார்கள். உடனே “அபூசயீத் சொன்னது உண்மை தான்” என அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Funerals (Al-Janaa'iz)
- Hadith Index
- #1309
- Book Index
- 67
Grades
- -