ஹதீஸ்கள்
#1280
ஸஹீஹ் அல்-புகாரீ - Funerals (Al-Janaa'iz)
ஸைனப் பின்த் அபீசலமா (ரலி) அவர்கள் கூறியதாவது: அபூசுஃப்யான் (ரலி) அவர்களின் இறப்புச் செய்தி ஷாம் (சிரியா) நாட்டி லிருந்து வந்த மூன்றாம் நாள் (அவரு டைய மகள்) உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் மஞ்சள் நிற வாசனைத் திரவியத்தை வரவழைத்து, தம் கன்னங்களிலும் முழங் கைகளிலும் தடவிக்கொண்டார்கள். மேலும், “அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பியுள்ள ஒரு பெண் தன் கணவனின் இறப்புக்காகத் தவிர, வேறு யாருக்காகவும் மூன்று நாட்களுக்குமேல் துக்கம் அனுசரிக்கக் கூடாது; கணவன் இறந்தால் மட்டும் நான்கு மாதமும் பத்து நாட்களும் துக்கம் அனுசரிக்க வேண்டும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டிராவிட்டால், இ(ந்த வாசனைத் திரவியமான)து எனக்குத் தேவையற்றது தான்” எனக் கூறினார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Funerals (Al-Janaa'iz)
- Hadith Index
- #1280
- Book Index
- 41
Grades
- -