ஹதீஸ்கள்
#1276
ஸஹீஹ் அல்-புகாரீ - Funerals (Al-Janaa'iz)
கப்பாப் பின் அல்அரத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் அல்லாஹ்வின் அன்பை நாடி நபி (ஸல்) அவர்களுடன் புலம் பெயர்ந்து (ஹிஜ்ரத்) சென்றோம். எங்களுக்கான பிரதிபலனை அளிப்பது அல்லாஹ்வின் பொறுப்பானது. எங்களில் சிலர் தமது பிரதிபலன் எதையும் (இவ்வுலகத்தில்) அனுபவிக்காமல் இறந்துவிட்டனர். அவர்களில் முஸ்அப் பின் உமைர் (ரலி) அவர்களும் ஒருவர். எங்களில் வேறு சிலருக்கு (ஹிஜ்ரத்தின்) பலன் கனிந்து அதைப் பறித்து (அனுபவித்து)க்கொண்டிருக்கிறார்கள். முஸ்அப் பின் உமைர் (ரலி) அவர்கள் உஹுத் போரில் கொல்லப்பட்டார் கள். அன்னாருக்கு ‘கஃபன்’ அணிவிக்க ஒரேயொரு சால்வை மட்டுமே இருந்தது. அதைக் கொண்டு அவரது தலையை மறைத்தால் கால்கள் வெளியில் தெரிந்தன; கால்களை மறைத்தால் தலை வெளியில் தெரிந்தது. அப்போது அவரது தலையைத் துணியால் மறைத்துவிட்டு, அவருடைய கால்களை ‘இத்கிர்’ என்ற புல்லைப் போட்டு மறைக்குமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். அத்தியாயம் :
حدثنا عمر بن حفص بن غياث، حدثنا ابي، حدثنا الاعمش، حدثنا شقيق، حدثنا خباب رضى الله عنه قال هاجرنا مع النبي صلى الله عليه وسلم نلتمس وجه الله، فوقع اجرنا على الله، فمنا من مات لم ياكل من اجره شييا منهم مصعب بن عمير، ومنا من اينعت له ثمرته فهو يهدبها. قتل يوم احد، فلم نجد ما نكفنه الا بردة اذا غطينا بها راسه خرجت رجلاه، واذا غطينا رجليه خرج راسه، فامرنا النبي صلى الله عليه وسلم ان نغطي راسه، وان نجعل على رجليه من الاذخر
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Funerals (Al-Janaa'iz)
- Hadith Index
- #1276
- Book Index
- 37
Grades
- -
