ஹதீஸ்கள்
#1274
ஸஹீஹ் அல்-புகாரீ - Funerals (Al-Janaa'iz)
இப்ராஹீம் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஒரு நாள், அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களிடம் அவர்களது உணவு கொண்டுவந்து வைக்கப்பட்டது. உடனே அவர்கள், முஸ்அப் பின் உமைர் (ரலி) அவர்கள் கொல்லப்பட்டபோது, -அவர் என்னைவிடச் சிறந்தவ ராக இருந்தார்- அவருக்கு ‘கஃபன்’ இடுவதற்கு ஒரு சால்வையைத் தவிர வேறெதுவும் கிடைக்கவில்லை. ஹம்ஸா (ரலி) அல்லது வேறொருவர் கொல்லப் பட்டபோது, -அன்னாரும் என்னைவிடச் சிறந்தவரே- அவருக்கு ‘கஃபன்’ இடுவதற்கும் ஒரு சால்வையைத் தவிர வேறெதுவும் கிடைக்கவில்லை. எனவே, நன்மை(களுக்கான பிரதி பலன்)களெல்லாம் எனக்கு இவ்வுலக வாழ்விலேயே முன்கூட்டியே கொடுக் கப்பட்டுவிடுமோ என நான் அஞ்சு கிறேன்” எனக் கூறிவிட்டு அழ ஆரம்பித்துவிட்டார்கள்.13 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Funerals (Al-Janaa'iz)
- Hadith Index
- #1274
- Book Index
- 35
Grades
- -