ஹதீஸ்கள்
#1268
ஸஹீஹ் அல்-புகாரீ - Funerals (Al-Janaa'iz)
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (இஹ்ராம் கட்டியிருந்த) ஒருவர் அரஃபாவில் நபி (ஸல்) அவர்களுடன் தங்கியிருந்தார். அப்போது அவர் தமது ஊர்தி ஒட்டகத்திலிருந்து கீழே விழுந்து விட்டார். -அது அவரது கழுத்தை முறித்துவிட்டது என அறிவிப்பாளர் அய்யூப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார் கள். அது அவரைக் கால்களால் மிதித்துக் கொன்றுவிட்டது என அறிவிப்பாளர் அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.- எனவே, அவர் இறந்து விட்டார். நபி (ஸல்) அவர்கள், “அவரது உடலை இலந்தை இலை கலந்த தண்ணீரால் நீராட்டி இரு ஆடைகளில் பிரேத ஆடை (கஃபன்) அணிவியுங் கள்; அவருக்கு வாசனைத் தூள் போட வேண்டாம்; அவரது தலையை மறைக் கவும் வேண்டாம்; ஏனெனில், அவர் மறுமை நாளில் தல்பியா (லப்பைக்...) கூறியவராக எழுப்பப்படுவார்” எனக் கூறினார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Funerals (Al-Janaa'iz)
- Hadith Index
- #1268
- Book Index
- 29
Grades
- -