ஹதீஸ்கள்
#1267
ஸஹீஹ் அல்-புகாரீ - Funerals (Al-Janaa'iz)
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (அரஃபாவில்) இருந்தோம். அப்போது இஹ்ராம் கட்டியிருந்த ஒருவரை, அவரது ஒட்டகம் கழுத்தை முறித்துக் கொன்று விட்டது. (எனவே, அவர் இறந்துவிட்டார்). அப்போது நபி (ஸல்) அவர்கள், “அவரது உடலை இலந்தை இலை கலந்த தண்ணீரால் நீராட்டி இரு ஆடைகளால் ‘கஃபன்’ இடுங்கள்; நறுமணம் பூச வேண்டாம்; அவரது தலையை மூடவும் வேண்டாம்; ஏனெனில், அவரை அல்லாஹ் மறுமை நாளில் தல்பியா (லப்பைக்...) சொன்னவராக எழுப்புவான்” எனக் கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا ابو النعمان، اخبرنا ابو عوانة، عن ابي بشر، عن سعيد بن جبير، عن ابن عباس رضى الله عنهم ان رجلا، وقصه بعيره، ونحن مع النبي صلى الله عليه وسلم وهو محرم فقال النبي صلى الله عليه وسلم " اغسلوه بماء وسدر، وكفنوه في ثوبين، ولا تمسوه طيبا، ولا تخمروا راسه، فان الله يبعثه يوم القيامة ملبدا
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Funerals (Al-Janaa'iz)
- Hadith Index
- #1267
- Book Index
- 28
Grades
- -
