ஹதீஸ்கள்
#1266
ஸஹீஹ் அல்-புகாரீ - Funerals (Al-Janaa'iz)
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (இஹ்ராம் கட்டியிருந்த) ஒருவர் அரஃபா மைதானத்தில் அல்லாஹ்வின் தூதருடன் தங்கியிருந்தார். திடீரென அவர், தமது ஊர்தி ஒட்டகத்திலிருந்து கீழே விழுந்துவிட்டார்; அது அவரது கழுத்தை மிதித்து முறித்துவிட்டது. (எனவே, அவர் இறந்துவிட்டார்.) அப்போது நபி (ஸல்) அவர்கள், “அவரது உடலை இலந்தை இலை கலந்த தண்ணீரால் நீராட்டி இரு ஆடை களால் சவக்கோடி (கஃபன்) அணி வியுங்கள்; (மற்றவர்களுக்குப் பூசுவதைப் போன்று) அவரது உடலுக்கு வாசனைத் தூள் போடவேண்டாம்; அவரது தலையை மறைக்கவும் வேண்டாம்; ஏனெனில், (இஹ்ராம் அணிந்திருந்த) அவர் மறுமை நாளில் ‘தல்பியா’ (லப்பைக் அல்லாஹும்ம லப்பைக்...) சொன்னவராக எழுப்பப்படுவார்” எனக் கூறினார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Funerals (Al-Janaa'iz)
- Hadith Index
- #1266
- Book Index
- 27
Grades
- -