ஹதீஸ்கள்
#1211
ஸஹீஹ் அல்-புகாரீ - Actions while Praying
அஸ்ரக் பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாங்கள் ‘அஹ்வாஸ்’ எனுமிடத்தில் ‘ஹரூரிய்யா’ கூட்டத்தாருடன் போர் செய்துகொண்டிருந்தோம்.7 அப்போது ஆற்றோரத்தில் ஒரு மனிதர் தமது வாகனப் பிராணியின் கடிவாளத்தை ஒரு கையில் பிடித்துக் கொண்டு தொழுதுகொண்டிருந்தார். வாகனம் அவரை இழுக்க அவரும் அதைத் தொடர்ந்தார். அவர் அபூபர்ஸா (ரலி) என்ற நபித் தோழராவார். அப்போது காரிஜிய்யாக் கூட்டத்தைச் சேர்ந்த ஒருவர் “இறைவா! இந்தக் கிழவரைத் தண்டிப்பாயாக” எனக் கூறினார். அந்தப் பெரியவர் தொழுது முடித்த தும், “நீங்கள் கூறியதை நான் கேட்டுக் கொண்டுதான் இருந்தேன். நான் நபி (ஸல்) அவர்களுடன் ஆறு அல்லது ஏழெட்டுப் போர்களில் பங்கெடுத்திருக் கிறேன். நபி (ஸல்) அவர்கள் மார்க் கத்தை இலகுவாக்கியிருப்பதையும் நான் பார்த்திருக்கிறேன். என் வாகனத்தை அதன் மேயும் இடத்துக்கு ஓட விட்டு விட்டு, கவலையுடன் நான் செல்வதை விட என் வாகனத்துடன் திரும்பிச் செல்வதே எனக்கு விருப்பமானது” எனக் கூறினார்.8 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Actions while Praying
- Hadith Index
- #1211
- Book Index
- 15
Grades
- -