ஹதீஸ்கள்
#1210
ஸஹீஹ் அல்-புகாரீ - Actions while Praying
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஒரு தொழுகை யைத் தொழுதார்கள். (தொழுது முடித்த தும்) “ஷைத்தான் எனக்குமுன் தோன்றி, என் தொழுகையை முறித்துவிட முயன் றான். அவன்மீது அல்லாஹ் எனக்குச் சக்தி அளித்தான். அவன் குரல்வளையை நான் பிடித்துவிட்டேன். அவனை ஒரு தூணில் கட்டிவைத்து காலையில் நீங்களெல்லாரும் பார்க்க வேண்டுமென விரும்பினேன். ‘இறைவா! எனக்குப்பின் யாருக்கும் வழங்காத ஆட்சியை எனக்கு வழங்குவாயாக! (38:35) என்று நபி சுலைமான் (அலை) அவர்கள் கூறி யது என் நினைவுக்கு வந்தது. (அதனால் அவனை விட்டுவிட்டேன்) இழிந்த நிலையில் அவனை அல்லாஹ் விரட்டி யடித்துவிட்டான்” என்று கூறினார்கள். நள்ர் பின் ஷுமைல் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ‘குரல்வளையைப் பிடித் தேன்’ என்பதைக் குறிக்க மூலத்தில் ‘தஅத்து’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இதற்கு ‘குரல்வளையை நெரித்தேன்’ என்பது பொருளாகும். (சில பிரதிகளில்) ‘தஃஅத்து’ என இடம்பெறுகிறது. இதற்கு ‘பிடித்துத் தள்ளினேன்’ என்பது பொருளா கும். “அவர்கள் அன்று நரகத்தில் தள்ளப் படுவர்” (52:13) எனும் வசனத்தில் இச்சொல்லே (யுதஃஊன) ஆளப்பட்டுள் ளது. இருப்பினும், முதலாவது உச்சரிப்பே உகந்ததாகும். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Actions while Praying
- Hadith Index
- #1210
- Book Index
- 14
Grades
- -