ஹதீஸ்கள்
#1206
ஸஹீஹ் அல்-புகாரீ - Actions while Praying
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (முற்காலத்தில்) ஒரு பெண்மணி, ஆசிரமம் ஒன்றில் இருந்த தம் மகனை ‘ஜுரைஜ்!’ என்று அழைத்தார். ஜுரைஜ் “இறைவா! என் தாயா? என் தொழு கையா? (யாரைக் கவனிப்பேன்)” என்று (மனதிற்குள்) கூறினார். மீண்டும் அப்பெண் ‘ஜுரைஜ்!’ என்று அழைத்த போது “இறைவா! என் தாயா? என் தொழுகையா?” என்று (மனத்திற்குள்) கூறினார். (மூன்றாவது முறையாகவும்) ‘ஜுரைஜ்!’ என்று அழைத்தார். அப்போதும் அவர் “இறைவா! என் தாயா? என் தொழுகையா?” என்று கூறினார். அப்போது அப்பெண் “இறைவா! விபசாரிகளின் முகத்தில் விழிக்காமல் ஜுரைஜ் இறக்கக் கூடாது” என்று துஆ செய்தார். ஆடு மேய்க்கும் பெண் ணொருத்தி ஜுரைஜுடைய ஆசிரமத்திற்கு வந்துசெல்பவளாக இருந்தாள். அவள் ஒரு குழந்தையைப் பெற்றாள். இந்தக் குழந்தை யாருக்குப் பிறந்தது என்று அவளிடம் கேட்கப்பட்டபோது, “ஜுரைஜுக்குத்தான்; அவர் தமது ஆசிரமத்திலிருந்து இறங்கிவந்து இவ்வாறு செய்துவிட்டார்” என்று அவள் கூறினாள். “தனது குழந்தையை எனக்குப் பிறந்தது எனக் கூறும் அப்பெண் எங்கே?” என்று ஜுரைஜ் கேட்டுவிட்டு, அவள் பெற்ற குழந்தையை நோக்கி, “சிறுவனே! உன் தந்தை யார்?” எனக் கேட்டார். அதற்கு அக்குழந்தை “ஆடு மேய்க்கும் இன்னார்” என விடையளித்தது. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.6 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Actions while Praying
- Hadith Index
- #1206
- Book Index
- 10
Grades
- -