ஹதீஸ்கள்
#1202
ஸஹீஹ் அல்-புகாரீ - Actions while Praying
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் தொழுகையில் ‘அத்தஹிய் யாத்’ ஓதும்போது (சிலரது) பெயரைக் குறிப்பிட்டு, ஒருவர்மீது மற்றவர் ‘சலாம்’ கூறிவந்தோம். இதைச் செவியுற்ற நபி (ஸல்) அவர்கள், “அத்தஹிய்யா(த்)து லில்லாஹி வஸ்ஸலவா(த்)து வத்தய்யிபா(த்)து, அஸ்ஸலாமு அலை(க்)க அய்யுஹந் நபிய்யு வ ரஹ்ம(த்)துல்லாஹி வ பர(க்)கா(த்)துஹு, அஸ்ஸலாமு அலைனா வ அலா இபாதில்லாஹிஸ் ஸாலிஹீன்; அஷ்ஹது அன் லா இலாஹ இல்லல் லாஹு வ அஷ்ஹது அன்ன முஹம்ம தன் அப்துஹு வரசூலுஹு” (சொல், செயல், பொருள் வடிவிலான எல்லாக் காணிக்கைகளும் அல்லாஹ்வுக்கே உரியன. நபியே! உங்கள்மீது அல்லாஹ் வின் சாந்தியும் அருளும் அருள்வள மும் ஏற்படட்டுமாக! எங்கள்மீதும் அல்லாஹ்வின் நல்லடியார்கள்மீதும் அல்லாஹ்வின் சாந்தி ஏற்படட்டுமாக! அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று நான் உறுதிமொழி கிறேன். முஹம்மத் (ஸல்) அவர்கள், அல்லாஹ்வின் அடியாரும் தூதரும் ஆவார்கள் என்றும் நான் உறுதிமொழி கிறேன்) என்று கூறுங்கள்! இவ்வாறு நீங்கள் கூறினால் வானம் மற்றும் பூமியிலுள்ள எல்லா நல்லடியார்களுக்கும் சலாம் கூறியவர்களாவீர்கள்” எனக் குறிப்பிட்டார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Actions while Praying
- Hadith Index
- #1202
- Book Index
- 6
Grades
- -