ஹதீஸ்கள்
#1199
ஸஹீஹ் அல்-புகாரீ - Actions while Praying
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஆரம்பக் காலத்தில்) நபி (ஸல்) அவர்கள் தொழும்போது அவர்களுக்கு நாங்கள் முகமன் (சலாம்) கூறுவோம். அவர்கள் எங்களுக்குப் பதில் சலாம் கூறுவார்கள். நாங்கள் (அபிசீனியாவின் மன்னர்) நஜாஷியிடமிருந்து திரும்பிய போது நபியவர்களுக்கு ‘சலாம்’ கூறினோம். அவர்கள் எங்களுக்குப் பதில் சலாம் கூறவில்லை. (தொழுது முடித்ததும்) “நிச்சயமாக தொழுகைக்கு என்று சில அலுவல்கள் உள்ளன” என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا ابن نمير، حدثنا ابن فضيل، حدثنا الاعمش، عن ابراهيم، عن علقمة، عن عبد الله رضى الله عنه قال كنا نسلم على النبي صلى الله عليه وسلم وهو في الصلاة فيرد علينا، فلما رجعنا من عند النجاشي سلمنا عليه فلم يرد علينا وقال " ان في الصلاة شغلا
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Actions while Praying
- Hadith Index
- #1199
- Book Index
- 2
Grades
- -
