ஹதீஸ்கள்
#1198
ஸஹீஹ் அல்-புகாரீ - Actions while Praying
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் என் சிறிய தாயார் மைமூனா (ரலி) அவர்களது வீட்டில் ஓர் இரவு தங்கினேன். ஒரு தலையணையின் அகலவாட்டில் நான் படுத்துக்கொண் டேன். நபி (ஸல்) அவர்களும் அவர் களின் துணைவி (மைமூனா) அவர்களும் அந்தத் தலையணையின் நீள வாட்டில் படுத்துக்கொண்டனர். நபி (ஸல்) அவர்கள் இரவின் பாதிவரை, அல்லது அதற்குச் சற்று முன்புவரை, அல்லது அதற்குச் சற்றுப் பின்புவரை தூங்கினார்கள். பிறகு அவர்கள் விழித்து அமர்ந்தார்கள். தமது கையால் தமது முகத்திலிருந்து தூக்க(க் கலக்க)த்தை அகற்றிவிட்டு ‘ஆலு இம்ரான்’ அத்தி யாயத்தின் கடைசிப் பத்து வசனங்களை ஓதினார்கள். பிறகு தொங்கவிடப்பட்ட தோல்பாத் திரத்தை நோக்கிச் சென்று அதிலிருந்து அழகிய முறையில் அங்கத் தூய்மை (உளூ) செய்து தொழலானார்கள். நானும் எழுந்து அவர்கள் செய்தது போலவே செய்து, அவர்களின் (இடது) பக்கத்தில் நின்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் தமது வலக் கரத்தை என் தலை மீது வைத்து எனது வலக்காதைப் பிடித்து (வலப் புறத்திற்கு) திருப்பினார்கள். இரண்டு ரக்அத்கள், பின் இரண்டு ரக்அத்கள், மேலும் இரண்டு ரக்அத்கள், பிறகு இரண்டு ரத்அத்கள், பிறகு இரண்டு ரக்அத்கள், மீண்டும் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பின்னால் வித்ர் தொழுதுவிட்டுப் படுத்துக்கொண் டார்கள். தொழுகை அறிவிப்பாளர் (முஅத்தின்) வந்ததும் எழுந்து சுருக்க மாக இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு (பள்ளிவாசலுக்குப்) புறப்பட்டு சுப்ஹு தொழுவித்தார்கள்.3 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Actions while Praying
- Hadith Index
- #1198
- Book Index
- 1
Grades
- -