ஹதீஸ்கள்
#1155
ஸஹீஹ் அல்-புகாரீ - Prayer at Night (Tahajjud)
ஹைஸம் பின் அபீசினான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அபூஹுரைரா (ரலி) அவர்கள் உரை யாற்றிக்கொண்டிருந்தபோது, தமது பேச்சி னிடையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். (அப்போது கவிஞர்) அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) அவர்களைக் கருத்தில் கொண்டு, “உங்களுடைய சகோதரர் எதையும் தவறாகச் சொல்பவர் அல்லர்” என்று குறிப்பிட்டுவிட்டு, (நபி (ஸல்) அவர்களைப் பற்றி அவர் இயற்றிய) பின்வரும் பாடல் வரிகளை எடுத்துரைத் தார்கள்: எங்களிடையே இறைவேதத்தை ஓதுகிறார் இறைத்தூதர் வைகறை புலரும்போது! எங்களுக்கு நல்வழி காட்டினார் நாங்கள் இருந்ததோ இருட்டில்! அவர் சொன்னதெல்லாம் நடக்கும் இப்போது எம் இதயங்களுக்கு உறுதி! இரவில் அவர் விலா படுக்கைக்கு அந்நியம் இணைவைப்பாளர்களோ மஞ்சங்களில் தஞ்சம்! இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prayer at Night (Tahajjud)
- Hadith Index
- #1155
- Book Index
- 36
Grades
- -