ஹதீஸ்கள்
#1153
ஸஹீஹ் அல்-புகாரீ - Prayer at Night (Tahajjud)
அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் என்னிடம், “நீர் இரவெல்லாம் நின்று வழிபடுவதாகவும் பகலெல்லாம் நோன்பு நோற்பதாகவும் கேள்விப்பட்டேனே (உண்மையா)?” என்று கேட்டார்கள். அதற்கு நான், “அப்படித்தான் செய்கிறேன்” என்றேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீர் இவ்வாறு செய்தால், உம்முடைய கண்கள் சொருகிவிடும்; உமது உடல் நலிந்துவிடும். நீர் உமது உடலுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கு உள்ளன; உம்மு டைய குடும்பத்தாருக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கு உள்ளன. எனவே, நீர் (ஒரு நாள்) நோன்பு நோற்பீ ராக! (ஒரு நாள்) நோன்பை விட்டுவிடு வீராக! (இரவில் சிறிது நேரம்) தொழுவீராக! (சிறிது நேரம்) உறங்குவீராக!” என்று கூறினார்கள்.19 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prayer at Night (Tahajjud)
- Hadith Index
- #1153
- Book Index
- 34
Grades
- -