ஹதீஸ்கள்
#1151
ஸஹீஹ் அல்-புகாரீ - Prayer at Night (Tahajjud)
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: என்னிடம் ‘பனூ அசத்’ குலத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி இருந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வீட்டுக்குள்) வந்து, “யார் இவர்?” என்று கேட்டார்கள். நான் “இவர் இன்னார்” என்று கூறிவிட்டு, “இரவெல்லாம் உறங்கமாட்டார் (தொழுதுகொண்டே இருப்பார்) என்று அவரது தொழுகை குறித்து கூறப்படுகிறது என்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் “போதும் நிறுத்து!” என்று கூறிவிட்டு, “(வழிபாடுகள் உள்ளிட்ட) நற்செயல்களில் உங்களால் இயன்றதையே (நிலையாகச்) செய்துவாருங்கள். நிச்சயமாக நீங்கள் சடைவடையாத வரை அல்லாஹ்வும் சடைவடையமாட்டான்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
قال وقال عبد الله بن مسلمة عن مالك، عن هشام بن عروة، عن ابيه، عن عايشة رضى الله عنها قالت كانت عندي امراة من بني اسد فدخل على رسول الله صلى الله عليه وسلم فقال " من هذه ". قلت فلانة لا تنام بالليل. فذكر من صلاتها فقال " مه عليكم ما تطيقون من الاعمال، فان الله لا يمل حتى تملوا
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prayer at Night (Tahajjud)
- Hadith Index
- #1151
- Book Index
- 32
Grades
- -
