ஹதீஸ்கள்
#1132
ஸஹீஹ் அல்-புகாரீ - Prayer at Night (Tahajjud)
மஸ்ரூக் பின் அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், “நபி (ஸல்) அவர்களுக்கு விருப்பமான நற்செயல் (அமல்) எது?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் ‘நிலையாகச் செய்யும் நற்செயல்’ என்று விடையளித்தார் கள். “(இரவுத் தொழுகைக்காக) நபி (ஸல்) அவர்கள் எப்போது எழுவார்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “சேவல் கூவும் நேரம் (இரவின் இறுதி மூன்றில் ஒரு பகுதியில்) எழுவார்கள்”’ என்று விடையளித்தார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில், ‘சேவல் கூவும்போது எழுந்து தொழுவார்கள்’ என்று இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
حدثني عبدان، قال اخبرني ابي، عن شعبة، عن اشعث، سمعت ابي قال، سمعت مسروقا، قال سالت عايشة رضى الله عنها اى العمل كان احب الى النبي صلى الله عليه وسلم قالت الدايم. قلت متى كان يقوم قالت يقوم اذا سمع الصارخ
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prayer at Night (Tahajjud)
- Hadith Index
- #1132
- Book Index
- 12
Grades
- -
