ஹதீஸ்கள்
#1074
ஸஹீஹ் அல்-புகாரீ - Prostration During Recital of Qur'an
அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அபூஹுரைரா (ரலி) அவர்கள் ‘இதஸ்ஸமாஉன் ஷக்கத்’ அத்தியாயத்தை ஓதி, அதில் (சஜ்தா வசனம் (21) வந்ததும்) சிரவணக்கம் செய்ததை நான் கண்டேன். அப்போது நான் அவர்களிடம், “அபூ ஹுரைரா அவர்களே! நீங்கள் சிர வணக்கம் செய்வதை நான் பார்த்தேனே (ஏன்)?” என்றேன். அதற்கு அபூஹுரைரா (ரலி) அவர்கள் “நபி (ஸல்) அவர்கள், (இந்த அத்தியாயத் தில்) சிரவணக்கம் செய்வதை நான் பார்த்திராவிட்டால், நானும் சிரவணக்கம் செய்திருக்கமாட்டேன்” என்று பதிலளித் தார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا مسلم، ومعاذ بن فضالة، قالا اخبرنا هشام، عن يحيى، عن ابي سلمة، قال رايت ابا هريرة رضى الله عنه قرا {اذا السماء انشقت} فسجد بها فقلت يا ابا هريرة، الم ارك تسجد قال لو لم ار النبي صلى الله عليه وسلم يسجد لم اسجد
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prostration During Recital of Qur'an
- Hadith Index
- #1074
- Book Index
- 8
Grades
- -
