ஹதீஸ்கள்
#1070
ஸஹீஹ் அல்-புகாரீ - Prostration During Recital of Qur'an
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (மக்காவில்) ‘அந்நநஜ்ம்’ அத்தியாயத்தை (53:62) ஓதி சிரவணக்கம் (சஜ்தா) செய்தார்கள். ஒரேயொரு மனிதரைத் தவிர, அங்கிருந்த மக்கள் அனைவரும் (நபியவர்களுடன் சேர்ந்து) சஜ்தா செய்தனர். அவர் ஒரு கையளவு பொடிக் கற்களையோ மண்ணையோ எடுத்துத் தனது நெற்றிக்குக் கொண்டு சென்றுவிட்டு, ‘இது எனக்குப் போதும்’ என்று (பரிகாசத்துடன்) கூறினார். பின்னர் அவர் இறைமறுப்பாளராகவே (பத்ர் போரில்) கொல்லப்பட்டதை நான் பார்த்தேன். அத்தியாயம் :
حدثنا حفص بن عمر، قال حدثنا شعبة، عن ابي اسحاق، عن الاسود، عن عبد الله رضى الله عنه ان النبي صلى الله عليه وسلم قرا سورة النجم فسجد بها، فما بقي احد من القوم الا سجد، فاخذ رجل من القوم كفا من حصى او تراب، فرفعه الى وجهه وقال يكفيني هذا، فلقد رايته بعد قتل كافرا
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prostration During Recital of Qur'an
- Hadith Index
- #1070
- Book Index
- 4
Grades
- -
