ஹதீஸ்கள்
#1063
ஸஹீஹ் அல்-புகாரீ - Eclipses
அபூபக்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களது காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. உடனே அவர்கள் தமது மேலாடையை இழுத்தபடியே பள்ளி வாசலைச் சென்றடைந்தார்கள். (தொழுது விட்டுச் சென்றிருந்த) மக்களும் அவர்களிடம் வந்து குழுமினர். அப்போது அவர்களுடன் நபி (ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். (கிரகணம் விலகி) சூரியன் ஒளிர்ந்த தும், “சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் சான்றுகளில் இரு சான்றுகளாகும். எவரது இறப்புக்காகவும் அவற்றில் கிரகணம் ஏற்படுவதில்லை. இ(த்தகைய கிரகண மான)து ஏற்பட்டால், உங்களைவிட்டு இது அகற்றப்படும்வரை தொழுங்கள்; பிரார்த்தி யுங்கள்” என்று கூறினார்கள்.10 இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் கூறக் காரணம், (கிரகணம் ஏற்பட்ட தினம்) நபி (ஸல்) அவர்களுடைய புதல்வர் இப்ராஹீம் எனப்படுவார் இறந்துவிட்டார். இதையொட்டி மக்கள் (‘இப்ராஹீமின் இறப்புக்காகவே கிரகணம் ஏற்பட்டது’ என்று) பேசிக்கொண்டனர். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Eclipses
- Hadith Index
- #1063
- Book Index
- 22
Grades
- -