ஹதீஸ்கள்
#1012
ஸஹீஹ் அல்-புகாரீ - Invoking Allah for Rain (Istisqaa)
அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் தொழும் திடலுக்குப் புறப்பட்டுச் சென்று மழைவேண்டிப் பிரார்த்திக்கலானார்கள். அப்போது ‘கிப்லா’ திசையை முன்னோக்கி, தமது மேல்துண்டை மாற்றிப் போட்டுக்கொண்டு (மக்களுடன்) இரண்டு ரக்அத்கள் தொழு தார்கள். அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகிறேன்: இந்த ஹதீஸின் அறிவிப்பாளரான அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர் களே தொழுகை அறிவிப்பு முறையான பாங்கை (கனவில்) கண்டவர் ஆவார் என சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறுவார்கள். ஆனால், அது தவறு. ஏனெனில், இந்த ஹதீஸின் அறிவிப்பாளரான அப்துல் லாஹ் பின் ஸைத் பின் ஆஸிம் (ரலி) அவர்கள் அன்சாரிகளிலுள்ள ‘மாஸின்’ குலத்தைச் சேர்ந்தவர் ஆவார். (பாங்கைக் கனவில் கண்டவர் பனூ தமீம் குலத்தைச் சேர்ந்தவர் ஆவார்.) அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Invoking Allah for Rain (Istisqaa)
- Hadith Index
- #1012
- Book Index
- 7
Grades
- -