ஹதீஸ்கள்
#1007
ஸஹீஹ் அல்-புகாரீ - Invoking Allah for Rain (Istisqaa)
மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாங்கள் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் இருந்தோம். அப்போது அவர்கள் கூறினார்கள்: மக்கள் (இஸ்லாத்தைப்) புறக்கணிப் பதை நபி (ஸல்) அவர்கள் கண்டபோது, “இறைவா! யூசுஃப் (அலை) அவர்களது (காலத்து) ஏழு (பஞ்சம் நிறைந்த) ஆண்டு களைப் போன்று இவர்களுக்கும் ஏழு (பஞ்ச) ஆண்டுகளை அளித்(து இவர் களைத் திருத்)திடுவாயாக!” என்று பிரார்த் தித்தார்கள். அவ்வாறே அவர்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டு (வளங்கள்) எல்லாவற்றையும் அழித்துவிட்டது. அவர்கள் பசியால் தோல்களையும் செத்தவற்றையும் பிணங் களையும் புசிக்க நேர்ந்தது. பசி பட்டினி யால் (கண் பஞ்சடைந்து பார்வை மங்கி) அவர்களில் ஒருவர் வானத்தை நோக்கி னால் (தமக்கும் வானத்திற்குமிடையே) அவர் புகை (போன்ற ஒன்றை)யே காண்பார். இந்நிலையில் (குறைஷியரின் தலைவர்) அபூசுஃப்யான் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “முஹம்மதே! இறைவனுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்றும் உறவுகளைப் பேண வேண்டும் என்றும் நீர் கட்டளையிடுகிறீர். உம்முடைய சமுதாயத்தார் அழிந்து விட்டனர். (பஞ்சம் விலக) அவர்களுக்காகப் பிரார்த்திப்பீராக!” என்று கூறினார். பிறகு “(நபியே!) வெளிப்படையானதொரு புகை வானி-ருந்து வரும் நாளை எதிர்பார்ப்பீராக!” என்று தொடங்கி, “நீங்கள் (இறைமறுப்புக்கே) திரும்பிச் செல்கிறீர்கள்; கடுமையான முறையில் நாம் பிடிக்கும் அந்நாளில்” என்று முடியும் (44:10-16) வசனங்களை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் ஓதிக்காட்டினார்கள். இந்த வசனத்திலுள்ள ‘பலமான பிடி’ (பத்ஷத்) என்பது பத்ர் போரைக் குறிக்கும். புகையும் இறைவனின் தண்டனைப் பிடியும் அவனுடைய வேதனையும் ‘அர்ரூம்’ அத்தியாயத்திலுள்ள (பாரசீகர் களால் கிழக்கு ரோமர்கள் தோற்கடிக்கப் படுவது பற்றிய) முன்னறிவிப்பும் நடந்து முடிந்துவிட்டன.3 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Invoking Allah for Rain (Istisqaa)
- Hadith Index
- #1007
- Book Index
- 3
Grades
- -