ஹதீஸ்கள்
#1006
ஸஹீஹ் அல்-புகாரீ - Invoking Allah for Rain (Istisqaa)
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (தொழுகையில்) கடைசி ரக்அத்தின் ருகூஉவி-ருந்து தலையை உயர்த்தியதும், “இறைவா! (மக்காவில் சிக்கிக்கொண்டிருக்கும்) அய்யாஷ் பின் அபீரபீஆவைக் காப்பாற்றுவாயாக! இறைவா! சலமா பின் ஹிஷாமைக் காப்பாற்றுவாயாக! இறைவா! வலீத் பின் அல்வலீதைக் காப்பாற்று வாயாக! இறைவா! நம்பிக்கையாளர்களில் ஒடுக்கப்பட்டவர்களைக் காப்பாற்றுவாயாக! இறைவா! ‘முளர்’ குலத்தாரின் மீது உன் பிடியை கடுமையாக்குவாயாக! இறைவா! (இறைத்தூதர்) யூசுஃப் (அலை) அவர் களின் சமுதாயத்தாருக்கு அளித்த பஞ்சம் நிறைந்த (ஏழு) ஆண்டுகளைப் போன்று இவர்களுக்கும் பஞ்சம் நிறைந்த ஆண்டுகளை அளிப்பாயாக!” என்று கூறிவந்தார்கள். மேலும் ‘ஃகிஃபார்’ குலத்தாருக்கு இறைவன் மன்னிப்பு அளிப்பானாக! ‘அஸ்லம்’ குலத்தாருக்கு அல்லாஹ் சமாதானத்தை அளிப்பானாக!” என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறுவார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில், அபுஸ்ஸினாத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இந்தப் பிரார்த்தனை முழுவதும் சுப்ஹு தொழுகையிலேயே நடந்தது.2 அத்தியாயம் :
حدثنا قتيبة، حدثنا مغيرة بن عبد الرحمن، عن ابي الزناد، عن الاعرج، عن ابي هريرة، ان النبي صلى الله عليه وسلم كان اذا رفع راسه من الركعة الاخرة يقول " اللهم انج عياش بن ابي ربيعة، اللهم انج سلمة بن هشام، اللهم انج الوليد بن الوليد، اللهم انج المستضعفين من المومنين، اللهم اشدد وطاتك على مضر، اللهم اجعلها سنين كسني يوسف ". وان النبي صلى الله عليه وسلم قال " غفار غفر الله لها، واسلم سالمها الله ". قال ابن ابي الزناد عن ابيه هذا كله في الصبح
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Invoking Allah for Rain (Istisqaa)
- Hadith Index
- #1006
- Book Index
- 2
Grades
- -
