ஹதீஸ்கள்
#985
ஸஹீஹ் அல்-புகாரீ - The Two Festivals (Eids)
ஜுன்தப் பின் அப்தில்லாஹ் அல்பஜலீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ‘ஈதுல் அள்ஹா’ பெருநாளன்று தொழுகை நடத்திவிட்டுப் பிறகு உரையாற்றினார்கள். அதற்குப்பின் ‘குர்பானி’ பிராணியை அறுத்தார்கள். “(பெருநாள்) தொழுகைக்கு முன்பே யார் (குர்பானிப் பிராணியை) அறுத்து விட்டாரோ அவர் அதற்குப் பதிலாக வேறொன்றை அறு(த்து குர்பானி கொடு)க்கட்டும். யார் அறுக்கவில்லையோ அவர் அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கட்டும்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا مسلم، قال حدثنا شعبة، عن الاسود، عن جندب، قال صلى النبي صلى الله عليه وسلم يوم النحر ثم خطب، ثم ذبح فقال " من ذبح قبل ان يصلي فليذبح اخرى مكانها، ومن لم يذبح فليذبح باسم الله
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- The Two Festivals (Eids)
- Hadith Index
- #985
- Book Index
- 34
Grades
- -
