ஹதீஸ்கள்
#984
ஸஹீஹ் அல்-புகாரீ - The Two Festivals (Eids)
அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாளன்று தொழுகை நடத்திவிட்டுப் பிறகு (குத்பா) உரை நிகழ்த்தினார்கள். அப்போது (பெருநாள்) தொழுகைக்கு முன்பே குர்பானி கொடுத்தவர் மறுபடியும் குர்பானி கொடுக்குமாறு கட்டளையிட்டார்கள். அப்போது அன்சாரிகளில் (அபூபுர்தா எனும்) ஒருவர் எழுந்து, “அல்லாஹ்வின் தூதரே, என் அண்டை வீட்டார் ‘பசியில் இருந்தனர்’ அல்லது ‘வறுமையில் இருந்த னர்’. (ஆகவே,) நான் தொழுகைக்கு முன்பே (குர்பானிப் பிராணியை) அறுத்து விட்டேன். என்னிடம் ஒரு வயதுடைய பெட்டை வெள்ளாடு ஒன்று உள்ளது. அது (கொழுத்த) இரண்டு இறைச்சி ஆடுகளை விட எனக்கு விருப்பமானது (அதை நான் அறுக்கலாமா?)” என்று கேட்டார். இந்த விஷயத்தில் அவருக்கு (மட்டும்) நபி (ஸல்) அவர்கள் அனுமதியளித் தார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- The Two Festivals (Eids)
- Hadith Index
- #984
- Book Index
- 33
Grades
- -