ஹதீஸ்கள்
#981
ஸஹீஹ் அல்-புகாரீ - The Two Festivals (Eids)
உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது: (பெருநாளில் பெண்களாகிய) நாங்கள் (தொழும் திடலுக்குப்) புறப்பட்டுச் செல்லுமாறு (நபியவர்களால்) கடடளையிடப்பட்டோம். அப்போது மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள், கன்னிப் பெண்கள், திரைக்குள்ளிருக்கும் பெண்கள் ஆகியோரையும் புறப்படச் செய்யும்படி கட்டளையிடப்பட்டோம். -இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு அவ்ன் (ரஹ்) அவர்கள், ‘அல்லது திரைக்குள்ளிருக்கும் கன்னிப் பெண்களையும்’ என்று ஐயத்துடன் அறிவிக்கிறார்- மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களோ முஸ்-ம்கள் கூடும் இடங்களிலும் அவர் களின் பிரார்த்தனையிலும் கலந்துகொள் வார்கள். ஆனால், அவர்கள் தொழும் இடத்தி-ருந்து ஒதுங்கியிருப்பார்கள். அத்தியாயம் :
حدثنا محمد بن المثنى، قال حدثنا ابن ابي عدي، عن ابن عون، عن محمد، قال قالت ام عطية امرنا ان نخرج فنخرج الحيض والعواتق وذوات الخدور. قال ابن عون او العواتق ذوات الخدور، فاما الحيض فيشهدن جماعة المسلمين ودعوتهم، ويعتزلن مصلاهم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- The Two Festivals (Eids)
- Hadith Index
- #981
- Book Index
- 30
Grades
- -
