ஹதீஸ்கள்
#978
ஸஹீஹ் அல்-புகாரீ - The Two Festivals (Eids)
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாள் அன்று எழுந்து தொழுதார்கள். (பெருநாள்) தொழுகையை முத-ல் நடத்திவிட்டுத்தான் (குத்பா) உரை நிகழ்த்தினார்கள். உரையாற்றி முடிந்ததும் அங்கிருந்து புறப்பட்டுப் பெண்கள் பகுதிக்குச் சென்று (தம்முடனிருந்த) பிலால் (ரலி) அவர்களின் கைமீது சாய்ந்தபடி பெண்களுக்கு அறிவுரை கூறினார்கள். பிலால் (ரலி) அவர்கள் தமது ஆடையை ஏந்திக்கொண்டிருக்க, பெண்கள் (தமது) தர்மத்தை அதில் இட்டுக்கொண்டிருந்தனர். (அறிவிப்பாளர்களில் ஒருவரான) இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறு கிறார்கள்: இதை எனக்கு அறிவித்த அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்களிடம் நான், “நோன்புப் பெருநாள் (ஸதக்கத்துல் ஃபித்ர்) தர்மத்தையா (அப்பெண்கள் இட்டனர்)?” என்று கேட்டேன். அதற்கு அதாஉ (ரஹ்) அவர்கள், “இல்லை. அப்போது தாமாக (விரும்பி)ச் செய்யும் தர்மப் பொருட் களையே போட்டனர். அவர்கள் தம் (கால் விர-ல் அணிந்திருந்த) மெட்டிகளையும் போடலாயினர். இன்னும் (பிற அணிகலன் களையும்) அவர்கள் போட்டனர்” என்று பதிலளித்தார்கள். நான் அதாஉ (ரஹ்) அவர்களிடம், “இவ்வாறு (பெண்கள் பகுதிக்குச் சென்று) போதனை செய்வது இன்றைக்கும் இமாம்கள்மீது கடமை என நீங்கள் கருதுகிறீர் களா?” என்றும் கேட்டேன். அதற்கு அவர்கள், “நிச்சயமாக அது அவர்களுக்குக் கடமைதான். அவர்கள் எப்படி இதைச் செய்யாம-ருக்க முடியும்?” என்று கேட்டார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- The Two Festivals (Eids)
- Hadith Index
- #978
- Book Index
- 27
Grades
- -