ஹதீஸ்கள்
#977
ஸஹீஹ் அல்-புகாரீ - The Two Festivals (Eids)
அப்துர் ரஹ்மான் பின் ஆபிஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், “பெருநாள் தொழுகையில் நபி (ஸல்) அவர் களுடன் நீங்களும் கலந்துகொண்டீர் களா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “ஆம். (உறவின் காரணத்தினால்) அவர்களுடன் எனக்கு நெருக்கம் இல்லாதிருந்திருப்பின் சிறுவனாக இருந்த நான் அவர்களுடன் கலந்துகொண்டிருக்க முடியாது. நபி (ஸல்) அவர்கள் (புறப்பட்டு) கஸீர் பின் அஸ்ஸல்த் அவர்களின் வீட்டிற்கு அருகே அடையாளம் இருந்த இடத்திற்கு வந்து (பெருநாள் தொழுகை) தொழுவித்து விட்டு, உரை நிகழ்த்தினார்கள். பிறகு பிலால் (ரலி) அவர்கள் தம்முட னிருக்க, பெண்கள் பகுதிக்கு வந்து அவர்களுக்கு அறிவுரை கூறினார்கள். அவர்களிடம் (மறுமையை) நினைவூட்டி னார்கள்; தர்மம் செய்யுமாறு அவர்களுக் குக் கட்டளையிட்டார்கள். அப்போது பெண்கள் தம் கைகளை நீட்டி பிலால் (ரலி) அவர்கள் (கையில் ஏந்தப்பட்டிருந்த) துணியில் அ(வர்களது தர்மத்)தை இட்டுக்கொண்டிருந்ததை நான் பார்த்தேன். பிறகு நபி (ஸல்) அவர்களும் பிலால் (ரலி) அவர்களும் இல்லம் நோக்கி நடந்தனர். அத்தியாயம் :
حدثنا مسدد، قال حدثنا يحيى، عن سفيان، قال حدثني عبد الرحمن بن عابس، قال سمعت ابن عباس، قيل له اشهدت العيد مع النبي صلى الله عليه وسلم قال نعم، ولولا مكاني من الصغر ما شهدته، حتى اتى العلم الذي عند دار كثير بن الصلت فصلى ثم خطب ثم اتى النساء، ومعه بلال، فوعظهن وذكرهن، وامرهن بالصدقة، فرايتهن يهوين بايديهن يقذفنه في ثوب بلال، ثم انطلق هو وبلال الى بيته
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- The Two Festivals (Eids)
- Hadith Index
- #977
- Book Index
- 26
Grades
- -
