ஹதீஸ்கள்
#976
ஸஹீஹ் அல்-புகாரீ - The Two Festivals (Eids)
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஈதுல் அள்ஹா பெருநாள் அன்று ‘அல்பகீஉ’ எனும் இடத்திற்குப் புறப்பட்டுச் சென்று, இரண்டு ரக்அத்கள் (பெருநாள் தொழுகையைத்) தொழுவித்தார்கள். பிறகு எங்களை முன்னோக்கியபடி, “இன்றைய தினம் நாம் முதலாவதாகச் செய்ய வேண்டிய வழிபாடு (யாதெனில்), முத-ல் நாம் (பெருநாள் தொழுகை) தொழுவோம்; பிறகு திரும்பிச் சென்று (குர்பானி பிராணிகளை) அறுப்போம். எனவே, யார் இவ்வாறு செய்கிறாரோ அவரே நமது வழிமுறையைப் பின் பற்றியவர் ஆவார். (பெருநாள்) தொழுகைக்கு முன்பே யார் (குர்பானிப் பிராணியை) அறுக்கிறாரோ அவர் தம் குடும்பத்தாருக்காக (முன்கூட்டியே) அவசரமாகத் தயார் செய்த ஒரு பொருளாகவே அது அமையும்; அது (குர்பானி) வழிபாட்டில் எதிலும் சேராது” என்று குறிப்பிட்டார்கள். அப்போது (அபூபுர்தா எனப்படும்) ஒருவர் எழுந்து, “அல்லாஹ்வின் தூதரே! (தொழுகைக்கு முன்பே குர்பானி பிராணியை) நான் அறுத்துவிட்டேன். என்னிடம் ஒரு வயது பூர்த்தியான ஆட்டைவிடச் சிறந்த ஒரு வயதுடைய (வெள்ளாட்டுக் குட்டி) ஒன்று உள்ளது (அதை நான் அறுக்கலாமா?)” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “(முத-ல் அறுத்ததற்குப் பதிலாக) இதை நீர் அறுத்துவிடுவீராக! உங்களுக்குப் பிறகு வேறவருக்கும் இது போதுமாகாது” என்று கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا ابو نعيم، قال حدثنا محمد بن طلحة، عن زبيد، عن الشعبي، عن البراء، قال خرج النبي صلى الله عليه وسلم يوم اضحى الى البقيع فصلى ركعتين، ثم اقبل علينا بوجهه وقال " ان اول نسكنا في يومنا هذا ان نبدا بالصلاة، ثم نرجع فننحر، فمن فعل ذلك فقد وافق سنتنا، ومن ذبح قبل ذلك فانما هو شىء عجله لاهله، ليس من النسك في شىء ". فقام رجل فقال يا رسول الله، اني ذبحت وعندي جذعة خير من مسنة. قال " اذبحها، ولا تفي عن احد بعدك
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- The Two Festivals (Eids)
- Hadith Index
- #976
- Book Index
- 25
Grades
- -
