ஹதீஸ்கள்
#975
ஸஹீஹ் அல்-புகாரீ - The Two Festivals (Eids)
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (சிறுவனாக இருந்தபோது) ‘நோன்புப் பெருநாளிலோ’ அல்லது ‘ஹஜ்ஜுப் பெருநாளிலோ’ நபி (ஸல்) அவர்களுடன் (தொழும் திடலுக்குப்) புறப்பட்டுச் சென்றேன். நபி (ஸல்) அவர்கள் (பெருநாள் தொழுகை) தொழுதுவிட்டுப் பிறகு உரை நிகழ்த்தினார்கள். பிறகு பெண்கள் பகுதிக்குச் சென்று அவர்களுக்கு அறிவுரை கூறினார்கள்; (மறுமை குறித்து) அவர்களுக்கு நினைவூட்டிப் பேசினார்கள்; தர்மம் செய்யும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள். அத்தியாயம் :
حدثنا عمرو بن عباس، قال حدثنا عبد الرحمن، حدثنا سفيان، عن عبد الرحمن، قال سمعت ابن عباس، قال خرجت مع النبي صلى الله عليه وسلم يوم فطر او اضحى، فصلى ثم خطب، ثم اتى النساء فوعظهن وذكرهن، وامرهن بالصدقة
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- The Two Festivals (Eids)
- Hadith Index
- #975
- Book Index
- 24
Grades
- -
