ஹதீஸ்கள்
#974
ஸஹீஹ் அல்-புகாரீ - The Two Festivals (Eids)
உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது: (பெருநாளில்) திரைக்குள்ளிருக்கும் கன்னிப் பெண்களை (தொழும் திடலுக்கு) புறப்படச் செய்யும்படி நாங்கள் கட்டளையிடப்பட்டோம். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஓர் அறிவிப்பில், ‘அறிவிப்பாளர் அய்யூப் (ரஹ்) அவர்கள்’ அல்லது ‘ஹஃப்ஸா பின்த் சீரீன் (ரஹ்) அவர்கள்’ “கன்னிப் பெண் களையும் திரைக்குள்ளிருக்கும் பெண் களையும் புறப்படச் செய்யும்படி நாங்கள் கட்டளையிடப்பட்டோம். ஆனால், மாத விடாய் ஏற்பட்டுள்ள பெண்கள் தொழும் இடத்தைவிட்டு ஒதுங்கிருப்பார்கள்” என்று கூடுதலாக அறிவித்துள்ளார்கள். அத்தியாயம் :
حدثنا عبد الله بن عبد الوهاب، قال حدثنا حماد، عن ايوب، عن محمد، عن ام عطية، قالت امرنا ان نخرج، العواتق وذوات الخدور. وعن ايوب عن حفصة بنحوه. وزاد في حديث حفصة قال او قالت العواتق وذوات الخدور، ويعتزلن الحيض المصلى
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- The Two Festivals (Eids)
- Hadith Index
- #974
- Book Index
- 23
Grades
- -
