ஹதீஸ்கள்
#935
ஸஹீஹ் அல்-புகாரீ - Friday Prayer
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை பற்றிக் குறிப்பிடுகையில், “வெள்ளிக்கிழமை அன்று ஒரு நேரம் இருக்கிறது; அந்த நேரத்தை ஒரு முஸ்-ம் அடியார் (சரியாக) அடைந்து, அதில் தொழுதவாறு நின்று அல்லாஹ் விடம் எதைக் கோரினாலும், அதை அவருக்கு அல்லாஹ் வழங்காமல் இருப்ப தில்லை.” என்று கூறினார்கள். (அந்த நேரத்தைப் பற்றிக் கூறியபோது) நபி (ஸல்) அவர்கள் அது மிகக் குறைந்த நேரம் என்பதைத் தமது கையால் சைகை செய்து உணர்த்தினார்கள். அத்தியாயம் :
حدثنا عبد الله بن مسلمة، عن مالك، عن ابي الزناد، عن الاعرج، عن ابي هريرة، ان رسول الله صلى الله عليه وسلم ذكر يوم الجمعة فقال " فيه ساعة لا يوافقها عبد مسلم، وهو قايم يصلي، يسال الله تعالى شييا الا اعطاه اياه ". واشار بيده يقللها
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Friday Prayer
- Hadith Index
- #935
- Book Index
- 59
Grades
- -
