ஹதீஸ்கள்
#927
ஸஹீஹ் அல்-புகாரீ - Friday Prayer
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (தமது இறுதிக் காலத்தில்) சொற்பொழிவுமேடை (மிம்பர்) மீது ஏறி (அமர்ந்து)கொண்டார்கள். அதுவே அவர்கள் அமர்ந்த இறுதி அமர்வாக அமைந்தது -அப்போது அவர்கள் தம் தோள்கள்மீது ஒரு போர்வையைப் போர்த்திக்கொண்டிருந்தார்கள்; தலையில் கறுப்புத் துணியொன்றால் கட்டுப் போட்டிருந்தார்கள். அவர்கள் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து விட்டுப் பிறகு, “மக்களே! என்னை நெருங்கி வாருங்கள்” என்று கூறியதும், மக்கள் அவர்கள் அருகில் திரண்டனர். பிறகு ‘அம்மா பஅத்’ (இறைவனைப் போற்றிப் புகழ்ந்தபின்...) (இதோ) இந்த அன்சாரிக் கூட்டத்தார் குறைந்துவிடுவார் கள்; (இஸ்லாத்தில் இணையும்) மக்கள், (எண்ணிக்கையில்) அதிகமாவார்கள். முஹம்மதின் சமுதாயத்தில் ஓர் அதிகாரப் பொறுப்பை ஏற்பவர், (தமது பொறுப்பைப் பயன்படுத்தி) ஒருவருக்கு நன்மை புரியவோ அல்லது யாரேனும் ஒருவருக் குத் தீங்கு செய்யவோ சக்தி பெற்றால், அன்சாரிகளில் நன்மை புரிகின்றவரின் நன்மையை ஏற்றுக்கொள்ளட்டும்; அவர் களில் தவறிழைப்பவரை (பெருந்தன்மை யோடு) மன்னித்துவிடட்டும்!” என்று சொன்னார்கள். அத்தியாயம் :
حدثنا اسماعيل بن ابان، قال حدثنا ابن الغسيل، قال حدثنا عكرمة، عن ابن عباس رضى الله عنهما قال صعد النبي صلى الله عليه وسلم المنبر وكان اخر مجلس جلسه متعطفا ملحفة على منكبيه، قد عصب راسه بعصابة دسمة، فحمد الله واثنى عليه ثم قال " ايها الناس الى ". فثابوا اليه ثم قال " اما بعد، فان هذا الحى من الانصار يقلون، ويكثر الناس، فمن ولي شييا من امة محمد صلى الله عليه وسلم فاستطاع ان يضر فيه احدا او ينفع فيه احدا، فليقبل من محسنهم، ويتجاوز عن مسيهم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Friday Prayer
- Hadith Index
- #927
- Book Index
- 51
Grades
- -
