ஹதீஸ்கள்
#890
ஸஹீஹ் அல்-புகாரீ - Friday Prayer
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (நபி (ஸல்) அவர்கள் இறக்கும் தறுவாயில் என் நெஞ்சில் சாய்ந்துகொண்டி ருந்தபோது என் சகோதரர்) அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் (ரலி) அவர்கள் தம்மிடமிருந்த பல் குச்சியால் பல் துலக்கியபடி வந்தார். அவரை அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் கூர்ந்து பார்த்தார்கள். அவரிடம் நான், “என்னிடம் இந்தப் பல் குச்சியைக் கொடுங்கள், அப்துர் ரஹ்மானே!” என்று கேட்க, அவர் என்னிடம் அதைக் கொடுத்தார். நான் கடித்து (அதன் முனையைத் துப்பி)விட்டு, அதை நன்றாக மென்று (மென்மைப்படுத்தி) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொடுத்தேன். அவர்கள் என் நெஞ்சின் மீது சாய்ந்தபடியே அதைக் கொண்டு பல் துலக்கிக் கொண்டார்கள். அத்தியாயம் :
حدثنا اسماعيل، قال حدثني سليمان بن بلال، قال قال هشام بن عروة اخبرني ابي، عن عايشة رضى الله عنها قالت دخل عبد الرحمن بن ابي بكر، ومعه سواك يستن به، فنظر اليه رسول الله صلى الله عليه وسلم فقلت له اعطني هذا السواك يا عبد الرحمن. فاعطانيه فقصمته ثم مضغته، فاعطيته رسول الله صلى الله عليه وسلم فاستن به وهو مستسند الى صدري
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Friday Prayer
- Hadith Index
- #890
- Book Index
- 15
Grades
- -
