ஹதீஸ்கள்
#886
ஸஹீஹ் அல்-புகாரீ - Friday Prayer
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளி வாசல் நுழைவாயில் அருகே கோடு போட்ட பட்டு அங்கி ஒன்று விற்கப்படு வதைக் கண்டார்கள். உடனே “அல்லாஹ் வின் தூதரே! இதைத் தாங்கள் வாங்கிக் கொண்டால் வெள்ளிக்கிழமையும் தூதுக் குழுக்கள் தங்களிடம் வரும்போதும் அணிந்துகொள்ளலாமே!” என்று சொன்னார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “மறுமையில் எந்த நற்பேறும் இல்லாதவர்தான் (இம்மையில்) இதை அணிவார்” என்று கூறினார்கள். பின்னர் அதே வகையைச் சேர்ந்த சில பட்டு அங்கிகள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு வந்தன. அவற்றில் ஒன்றை உமர் (ரலி) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் கொடுத்தார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! எனக்கு இதை அணிந்துகொள்ளக் கொடுக்கிறீர்களே! (பனூ தமீம் குலத்தைச் சேர்ந்த) ‘உதாரித்’ அவர்கள் வழங்கிய கோடுபோட்ட பட்டு அங்கி விஷயத்தில் வேறு விதமாகச் சொன்னீர்களே!” என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அதை நீர் அணிந்துகொள்ள வேண்டுமென்பதற்காக உமக்கு நான் கொடுக்கவில்லை. (அதன் மூலம் வேறு வகையில் நீர் பயன்பெற்றுக்கொள்ளவே நான் வழங்கினேன்)” என்று கூறினார்கள். ஆகவே, உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள், மக்காவில் இருந்த இணைவைப் பாளரான தம் சகோதரர் ஒருவருக்கு அதை அணியக் கொடுத்துவிட்டார்கள்.5 அத்தியாயம் :
حدثنا عبد الله بن يوسف، قال اخبرنا مالك، عن نافع، عن عبد الله بن عمر، ان عمر بن الخطاب، راى حلة سيراء عند باب المسجد فقال يا رسول الله، لو اشتريت هذه فلبستها يوم الجمعة وللوفد اذا قدموا عليك. فقال رسول الله صلى الله عليه وسلم " انما يلبس هذه من لا خلاق له في الاخرة ". ثم جاءت رسول الله صلى الله عليه وسلم منها حلل، فاعطى عمر بن الخطاب رضى الله عنه منها حلة فقال عمر يا رسول الله، كسوتنيها وقد قلت في حلة عطارد ما قلت قال رسول الله صلى الله عليه وسلم " اني لم اكسكها لتلبسها ". فكساها عمر بن الخطاب رضى الله عنه اخا له بمكة مشركا
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Friday Prayer
- Hadith Index
- #886
- Book Index
- 11
Grades
- -
