ஹதீஸ்கள்
#876
ஸஹீஹ் அல்-புகாரீ - Friday Prayer
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நாம்தான் (காலத்தால்) பிந்தியவர்களாக வும் மறுமை நாளில் (தகுதியால்) முந்திய வர்களாகவும் இருப்போம். எனினும், (யூத, கிறித்தவரான) அவர்கள் நமக்கு முன்பே வேதம் அருளப்பெற்றார்கள். மேலும், இந்த (வெள்ளி)க்கிழமைதான் அவர்களுக்கும் (வார வழிபாட்டு) நாளாக கடமையாக் கப்பட்டிருந்தது. ஆனால், அவர்கள் இ(ந்த நாளை வார வழிபாட்டு நாளாக ஏற்றுக்கொள்வ)தில் கருத்து வேறுபாடு கொண்டனர். ஆகவே, அல்லாஹ் நமக்கு இந்த நாளை அறிவித்தான். இதில் மக்கள் அனைவரும் நம்மைப் பின்தொடர்பவர்களாகவே உள்ளனர். (எவ்வாறெனில், வெள்ளிக்கிழமை நமது வார வழிபாட்டு நாள் என்றால்) நாளை (சனிக்கிழமை) யூதர்களின் (வழிபாட்டு) நாளாகும்; மறுநாள் (ஞாயிற்றுக் கிழமை) கிறித்தவர்களின் (வழிபாட்டு) நாளாகும்.2 இதை அபூ.ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Friday Prayer
- Hadith Index
- #876
- Book Index
- 1
Grades
- -