ஹதீஸ்கள்
#860
ஸஹீஹ் அல்-புகாரீ - Call to Prayers (Adhaan)
அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது: என் (தாய் வழிப்)பாட்டி முளைக்கா (ரலி) அவர்கள் உணவு சமைத்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை (விருந்துண்ண) அழைத்தார்கள். நபி (ஸல்) அவர்கள் (வந்து) அதில் சிறிதளவை உண்டுவிட்டுப் பின்னர், “எழுங்கள்! உங்களுக்காக நான் (கூடுதல் தொழுகை யைத்) தொழுவிக்கிறேன்” என்று கூறி னார்கள். (தொழுவதற்காக) நான் எங்களுக் குரிய பாயொன்றை (எடுக்க அதை) நோக்கி எழுந்தேன்; அதுவோ நீண்ட நாட்கள் பயன்படுத்தப்பட்டதால் கறுப்பாகி யிருந்தது. ஆகவே, அதில் நான் தண்ணீரைத் தெளித்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அந்தப் பாயில் தொழுகைக்காக) நின்றார்கள். நானும் என்னுடன் ஓர் அநாதைச் சிறுவரும் (முதல் வரிசையில்) நிற்க அந்த மூதாட்டி எங்களுக்குப் பின்னால் (தனியாக) நின்றுகொண்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு (இமாமாக நின்று கூடுதலான) இரண்டு ரக்அத்கள் தெழுவித்தார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Call to Prayers (Adhaan)
- Hadith Index
- #860
- Book Index
- 251
Grades
- -